|
Friday, 09 September 2011 09:54 |
|
நகர பிதா நடராஜா அனந்தராஜ் வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு போதிய நில வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரிய தபால் நிலையம்,சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன நூலகம்,போன்றவற்றை அமைப்பதற்கான நிதி இருந்தும் அவற்றை அமைக்கமுடியாது உள்ளது.
அதே வேளை தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், முதியோர இல்லம் போன்றவற்றை அமைப்பதற்குரிய நிலம் தொண்டைமானாற்றில் வசிக்கும் பெருந்தகைகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அன்பளிப்பாக வழங்கப்பட்ட உரு நிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் திறக்கப்பட்டுள்ளது.மற்றைய நிலத்தில் நீர்த்தாங்கியும் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வல்வை உறவுகளே நீங்கள் புலம்பெயர் நாடுகளில் நிரந்தரமாக வாழும் நிலையில் இந்த ஊரில் உங்களுக்கு இருக்கும் நிலங்களைவ வல்வெட்டித்துறை நகர சபையிடம் கையளிப்பீர்களாயின் அல்லது நியாயமான விலைக்கு வழங்குவீர்களாயின் அவை எமது மக்களுக்குப் பயன்படுவதுடன் உங்களுடைய நிலமும் உங்களிடமே இருக்கும். இது தொடர்பாக உங்களுக்கு மேலதிக விபரம் தேவையாயின் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
|