வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு போதிய நில வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரிய தபால் நிலையம்,சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன நூலகம்,போன்றவற்றை அமைப்பதற்கான நிதி இருந்தும் அவற்றை அமைக்கமுடியாது உள்ளது.
மாணவர்களின் விஞ்ஞான அறிவையும், வெளிக்களப் பயிற்சி அனுபவங்களையும் மேம்படுத்தி விஞ்ஞானக் கல்வியை தரமானதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் யுத்தத்தினால் சேதப்படுத்தப்பட்டு, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அதன் முழுமையான செயற்பாட்டை மேற் கொள்ளமுடியாத நிலையில் யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக இயங்கி வந்ததால் அதன் பயனை மாணவர்கள் முழுமையாக அடைய முடியாது இருந்தது.